இணையம்வழி வேலை வாய்ப்பு மோசடி: 461 பேர் $6.8 மில்லியன் இழப்பு

இணையக் கலந்துரையாடல் செயலிவழி குறைந்தது 461 பேர் மொத்தம் $6.8 மில்லியனை இவ்வாண்டு இதுவரை இழந்துள்ளனர் என்று புதன்கிழமையன்று (பிப்ரவரி 14) காவல்துறை தெரிவித்தது.

வாட்ஸ்அப், டெலிகிராம், போன்ற தகவல் பரிமாற்ற தடங்களில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் ஒருவர் பெயரை சேர்த்து வேலை வாய்ப்பு தருவதாக ஆசை காட்டினால் அதில் விழாமல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபோன்ற முதலீட்டு மோசடிகளில் பாதிக்கப்படுபவர் மோசடிக்காரர்களால் தகவல் பரிமாற்றக் குழுக்களுடன் சேர்க்கப்படுவர். அதில் மற்றவர்கள் (தாங்கள் மோசடிக்கு ஏதுவாக) லாபம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மோசடிக்காரர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது போலவும் போலியான பத்திரங்களை பதிவேற்றுவர்.

இதில் ஏமாந்து தொடர்புகொள்பவர்கள், மோசடி முதலீட்டு தொகுப்புகளில் சேருமாறு அழைக்கப்படுவர். பின்னர் அவர்களின் தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்கு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறி மோசடியில் சிக்கியவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை மோசடிக்காரர்கள் பெறுவர்.

இதைத் தொடர்ந்து பேநவ், வங்கிக் கணக்கு அல்லது கிரிப்டோ கரன்சி பணப்பை மூலமாகவோ பணப் பரிமாற்றம் செய்யும்படி கூறுவர்.

மோசடிக்காரர்கள் போலியான முதலீட்டுத் தளங்களுக்கு பாதிக்கப்படுவர்களை இட்டுச் செல்ல ஏதுவாக ‘விபிஎன்’ செயலியைப் பதிவிறக்கம் செய்யவும் கூறுவர் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!