டெங்கி சம்பவங்கள் அதிகரிப்பு

இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஆண்டு தொடங்கி முதல் சில வாரங்களிலேயே இவ்வளவு அதிகமான டெங்கி சம்பவங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவாகியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பதிவான டெங்கி சம்பவங்களில் இது ஐந்தில் ஒரு பங்கு.

இந்நிலையில், தொடர்ந்து ஒன்பது வாரங்களாக டெங்கி சம்பவம் அதிகரித்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை கவலைக்குரியது என்று அது கூறியது.

ஆனால் டெங்கியால் இவ்வாண்டு மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படுமா என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது என்று வாரியம் தெரிவித்தது.

ஜனவரி 28ஆம் தேதிக்கும் பிப்ரவரி 3ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 494 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டது.

அதையடுத்து, பிப்ரவரி 6ஆம் தேதி காலை 11 மணி நிலவரப்படி மேலும் 185 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கியால் தற்போது 96 வட்டாரங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

அங் மோ கியோ அவென்யூ1, 3 மற்றும் ஸ்திரீட் 31 பகுதிகள் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வட்டாரத்தில் 106 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அவர்களில் 48 பேருக்குக் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டது.

அங் மோ கியோ அவென்யூ 1 புளோக் 303ல் மட்டும் 19 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!