கனமழையைப் பொருட்படுத்தாது ரத ஊர்வலத்தில் பக்தர்கள் பங்கேற்பு

தைப்பூசத் திருவிழாவின் முந்தைய நாளான நேற்று, (ஜனவரி 24) காலை 5 மணியளவில் வெள்ளி ரதம் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலிலிருந்து புறப்பட்டு, சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சற்று நேரம் நின்று, பின்னர் கியோங் செய்க் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தைச் சென்றடைந்தது.

பின்னர் வெள்ளி ரத ஊர்வலம் மீண்டும் ஜனவரி 24 மாலையில் ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தில் தொடங்கியது.

கனத்த மழையின் காரணமாக வழக்கத்தைவிட ரதம் சற்று தாமதமாக மாலை ஆறு மணியளவில் புறப்பட்டது.

அங்­கி­ருந்து ரதமேறிய முரு­கப்­பெ­ரு­மான், சிசில் ஸ்தி­ரீட், ஹை ஸ்தி­ரீட் வழி­யாக நகர்வலம் வந்து இரவு 9.20 மணிக்கு தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தை வந்­த­டைந்­தார்.

விட்­டு­விட்­டுப் பெய்­த­படியே இருந்த மழை­யை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் நிகழ்வில் பங்­கேற்று மகிழ்ந்­தனர்.

நிகழ்வில் ரத ஊர்வலத்தோடு, நகரத்தாரின் காவடி ஊர்வலமும் இடம்பெற்றது. காவடி ஏந்திய நகரத்தார் சவுத் பிரிட்ஜ் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்துக்குள் சென்று, ஆலயம் வலம் வந்து சிறிது நேரம் காவடியாட்டம் போட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வெள்ளி ரதம் செல்லும் பாதையில் இணைந்துகொண்டனர்.

சென்றாண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு அதிகமான அளவில் கிட்டத்தட்ட 160க்கும் மேற்பட்ட நகரத்தாரின் காவடிகள் வெள்ளி ரதத்துக்கு முன்னால் ஆடிக்கொண்டு சென்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!