சாலை விபத்தில் 75 வயது மாது மரணம், டாக்சி ஓட்டுநர் கைது

சாலை விபத்தில் வயதான நடையர் உயிரிழந்ததை அடுத்து டாக்சி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புளோக் 90 ராபர்ட்ஸன் கீயில் ஜனவரி 6ஆம் தேதி பிற்பகல் நிகழ்ந்த சாலை விபத்து குறித்து மாலை 5.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் தொடர்புகொண்டபோது தெரிவித்தனர்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 75 வயது மாது மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக 67 வயது முதியவரான அந்த டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார் என்று கூறிய காவல்துறை, சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றும் கூறியது.

எம் சோஷியல் ஹோட்டலுக்கு எதிரே, அந்த மாது சாலையைக் கடக்கும்போது விபத்து நடந்ததாக சீன ஊடக நிறுவனமான ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!