கேலாங்கில் சண்டை; 32 வயது ஆடவர் கைது

கேலாங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூண்ட சண்டையில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 32 வயது ஆடவர் ஒருவர், ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

எண் 38 லோரோங் 25 கேலாங் அருகே நடந்த சண்டை குறித்து இரவு 8.15 மணியளவில் தங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.

சண்டையில் 46 வயது ஆடவர் ஒருவரும் சம்பந்தப்பட்டதாக சீன நாளிதழான சாவ்பாவ் கூறியது. சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்தபோது, ஆடவர்கள் இருவரும் சட்டையின்றி, காலணிகளின்றி காணப்பட்டனர்.

அந்த 32 வயது ஆடவர், மற்றோர் ஆடவரைக் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுவதாக சாவ்பாவ் குறிப்பிட்டது. கைவிலங்கிடப்பட்டு சாலையோரமாக அமர்ந்திருந்த அவரைக் காவல்துறை அதிகாரிகள் சூழ்ந்திருந்தனர். பின்னர் காவல்துறை வாகனத்துக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டனர்.

சண்டை மூண்டபோது அங்கு பெண் ஒருவரும் காணப்பட்டார். ஆனால், சண்டையிட்ட அவ்விரு ஆடவர்களுக்கும் அப்பெண்ணுக்கும் இடையேயான உறவு குறித்து தெரியவில்லை.

டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அந்த 46 வயது ஆடவர் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

இச்சண்டையின்போது மற்றொருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட மறுத்துவிட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!