ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் சிற்றுந்திலிருந்து குதித்து மோட்டர்சைக்கிளோட்டி ஒருவருக்கு மரணம் விளைவித்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட ரஷ்ய நாட்டவர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவருடைய வழக்கை விரைந்து விசாரிக்க முயற்சிப்போம் என அரசுத் தரப்புத் தெரிவித்தது.
அந்த 38 வயது ரஷ்ய நாட்டவரின் பெயர் எல்டானிஸ் அபிஷோவ்.
ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்த சிற்றுந்திலிருந்து குதித்து மோட்டார்சைக்கிளோட்டி முஹம்மது நூர்ஹில்மி அட்டனுக்குக் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக அபிஷாவ்மீது கடந்த மாதம் குற்றம்சாட்டப்பட்டது.
இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் 8ஆம் தேதி காலை 11 மணியளவில் நடந்தது எனவும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நூர்ஹில்மி மருத்துவமனையில் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது.