ஆதித்யா விண்கலம் ஜனவரி 7ம் தேதி சூரியனின் எல்-1 சுற்றுப்பாதையில் நுழையும்

திருவனந்தபுரம்: ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து கடந்த செட்பம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா விண்கலம். இந்த விண்கலம் சூரியனின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது.

ஆதித்யா விண்கலத்தை இஸ்ரோவின் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து விஞ்ஞானிகள் அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றனர். அந்த விண்கலம் இப்போது சீரான வேகத்தில் சூரியனின் எல்-1 பகுதியை நோக்கிச் செல்வதாகவும் அது ஜனவரி 7ஆம் தேதி அப்பகுதிக்குள் நுழையும் எனவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஆதித்யா விண்கலம் எல்-1 பகுதியை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் சோம்நாத் தெரிவித்தார்.

ஆதித்யா விண்கலம் எல்-1 பகுதியை மையமாக கொண்ட சுற்றுப்பாதையில் வலம்வந்தவாறு சூரியனின் கரோனா மற்றும் போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!