காங்கிரஸ் கட்சியின் ரூ.752 கோடி சொத்துக்கள் முடக்கம்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கின் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

நிறுவனத்தின் டெல்லி, மும்பை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதில், ரூ.661.69 கோடி மதிப்பிலான டெல்லி, மும்பை, லக்னோ போன்ற நகரங்களில் உள்ள அசையாச் சொத்துக்கள், யங் இந்தியா நிறுவனத்தின் ரூ.90.21 கோடி பங்குகள் ஆகியவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குநர்களாக இருக்கும் ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை, கடந்த 2010ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 2013ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறது.

இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பவன் குமார் பன்சால் ஆகியோரிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!