பவன் கல்யாண் கட்சியுடன் பாஜக உடன்பாடு

ஹைதராபாத்: தென் மாநிலங்களில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவும் கைவிட்டுப்போன நிலையில், தெலுங்கானாவில் காலூன்ற முனைப்புக் காட்டிவரும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), பவன் கல்யாண் கட்சியான ஜனசேனாவுடன் தொகுதி உடன்பாடு செய்துகொண்டுள்ளது.

இதன் தொடர்பில் விரைவில் இரு கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த முடிவை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎம்மும் காங்கிரஸும் வலுவாக இருக்கும் கேரளாவிலோ, திராவிடக் கட்சிகள் வலுவாக இருக்கும் தமிழ்நாட்டிலோ ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்பதால் ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சந்திரசேகர ராவ் ஆட்சியைப் பிடிக்க கடுமையாகப் போராடி வருகிறார். இதில் அவருடைய பிஆர்எஸ் கட்சியே வெற்றி பெறும் என்று  கருத்துக் கணிப்புகள்  கூறுகின்றன. எனினும் காங்கிரஸ் கட்சி பலத்த போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!