இந்தியாவில் இனி மாநிலக் கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுமே தெலுங்கானா மாநிலம் உருவாக போராட்டம் நடத்தவில்லை. அதன் வளர்ச்சிக்காகவும் அவை எதுவும் செய்யவில்லை.பாரத ராஷ்ட்ரிய சமிதி ஆட்சிக் காலத்தில்தான் தெலுங்கானா பெரும் வளர்ச்சியை சந்தித்தது என்று கூறினார்.
“எனது உயிர் உள்ளவரை தெலுங்கானா மதசார்பற்ற கொள்கை உடைய மாநிலமாகவே நீடிக்கும். இந்தியாவில் இனி மாநிலக் கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா மாநிலச் சட்டசபைக்கு நவம்பர் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.