குஜராத்தில் சிக்கிய பாகிஸ்தான் உளவாளி

காந்தி நகர்: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் பாகிஸ்தான் உளவாளியை இந்திய அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆனந்த் மாவட்டத்தில் இந்திய சிம் அட்டை மூலம் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்களை ஒருவர் அனுப்புவதாக இந்திய ராணுவ உளவுத் துறையிடமிருந்து தங்களுக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து கண்காணிப்பை அதிகரித்ததாக குஜராத்தின் காவல்துறை தெரிவித்தது.

முக்கிய நபர்களின் கைப்பேசிகளுக்கு நச்சு நிரல்களை அனுப்பி தகவல்களை உளவாளி திருடி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் தூதரகத் தொடர்புடைய நபரின் அறிவுறுத்தலின் பேரில் இது நடந்ததாகவும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

பிடிபட்டவர் பெயர் லப்சங்கர் மகேஸ்வரி என்றும் அவர் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. 1999-ல் இந்தியாவில் குடியேறி அதன் பின்னர் அவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது.

இந்திய ராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களை குறிவைத்து அவர் உளவுத் தகவல்களைத் திரட்டியுள்ளார். விசாரணைத் தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!