அயோத்தி சரயு நதியில் உல்லாசக் கப்பல் சேவை தொடங்கியது

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி நகரில் உள்ள பிரபலமான சரயு நதியில் வெள்ளிக் கிழமை உல்லாசக் கப்பல் போக்குவரத்துத் தொடங்கியது.

அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்படுகிறது.

இந்தக் கோயில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அயோத்தி நகரம் முழு வசதிகளுடன் தயாராகி வருகிறது. அந்நகரின் உள்கட்டமைப்பு வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சரயு நதியில் வெள்ளிக்கிழமை உல்லாசக் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவை பற்றி விளக்கிய அயோத்தி மாநகராட்சி ஆணையர் விஷால் சிங், “ஜடாயு என்ற பெயரில் அயோத்தி சரயு நதியில் வெள்ளிக்கிழமை சொகுசுக் கப்பல் சேவையை தொடங்குகிறோம். இந்தக் கப்பலில் ராமாயணத்தை சித்திரிக்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டு உள்ளன,” என்றார்.

நயா படித்துறையில் இருந்து குப்தர் படித்துறைக்கு சொகுசுக் கப்பல் இயக்கப்படுகிறது. சொகுசுக் கப்பல் பயணம், சரயு நதியில் நடைபெறும் தீபாராதனையை பார்க்கும் வகையில் இருக்கும்.

சொகுசுக் கப்பல் சேவையை நடத்தும் ஒப்பந்தத்தை பெற்றுள்ள அயோத்தியா க்ரூசே லைன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ராகுல் சர்மா, “ஜடாயு சொகுசுக் கப்பலில் ஒரே நேரத்தில் நூறு பேர் பயணம் செய்ய முடியும். ஒரு நபருக்கு தலா ரூ.300 கட்டணம் நிர்ணயித்துள்ளோம்,” என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!