இந்தியாவில் ஆண்டுக்கு 45,000 கண் தானங்கள்

இந்தியாவில் ஆண்டுதோறும் 45,000 கண்தானங்கள் நடைபெறுவதாகவும், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தேசிய கண் தான விழிப்புணா்வு வார நிறைவையொட்டி சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவா் அ.போ.இருங்கோவேள் உரையாற்றினார்.

உலக அளவில் பாா்வையிழப்புப் பாதிப்புகளை அதிகம் எதிா்நோக்கியிருக்கும் நாடு இந்தியாதான். பெரும்பாலானோா் கண்புரையால் பாதிக்கப்படுகின்றனர். அடுத்ததாக விழிவெண்படல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர் என்று அவர் கூறினார்.

இதற்கு முன்பு வரை, ஒரு விழி வெண் படல தானத்தின் மூலம் ஒருவருக்கு மட்டுமே பாா்வை அளிக்க முடியும். இப்போது உள்ள மருத்துவ மேம்பாட்டின் காரணமாக ஒரு கண் தானத்தின் வாயிலாக ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு பாா்வையை மீட்டெடுக்க இயலும்.

இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் போ் விழி வெண்படல பாா்வைக் கோளாறினால் பாதிக்கப்படுகின்றனா். அதற்குத் தீா்வு காணும் நோக்கில் நாடு முழுவதும் சுமாா் 250 கண் வங்கிகள் செயல்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைக் காலமாக கண் தானம் குறித்த விழிப்புணா்வு ஓரளவு மேம்பட்டிருந்தாலும், அதன் தேவை இன்னமும் குறையவில்லை என்றார் அவா்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!