இந்தியாவில் முதன்முறை; ஆய்வகத்தில் மீன் இறைச்சி உருவாக்கம்

கொச்சி: இந்தியாவில் முதன்முறையாக ஆய்வகத்தில் செயற்கை முறையில் மீன் இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

கேர்ள மாநிலம், கொச்சியில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றம் (ஐசிஏஆர்) - மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் இந்த முன்னோடி முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் கடலுணவிற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அத்தேவையை ஈடுகட்டும் நோக்குடன் செயற்கை முறையில் மீன் இறைச்சியை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு கொண்டுள்ளது.

மீனிலிருந்து சில குறிப்பிட்ட குறிப்பிட்ட உயிரணுக்களைத் தனிமைப்படுத்தி, பின்னர் அவற்றை ஆய்வகத்தில் வளர்த்து, செயற்கையாக மீன் இறைச்சியை உருவாக்கியாக மீன்வள ஆராய்ச்சி நிலையம் ஓர் அறிக்கை மூலமாகத் தெரிவித்தது.

செயற்கை மீன் இறைச்சி என்றாலும், அதன் சுவை, அமைப்பு, ஊட்டச்சத்து ஆகியவை இயற்கையாகக் கிடைக்கும் மீன் போன்றே இருக்கும் என்றும் அது குறிப்பிட்டது.

இதனைத் தொடர்ந்து, செயற்கை முறையில் மீன் இறைச்சி உருவாக்குவது தொடர்பான கூட்டு ஆராய்ச்சி உடன்பாட்டில் மீன்வள ஆராய்ச்சி நிலையமும் ‘நீட் மீட் பயோடெக்’ எனும் தனியார் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!