சிபிஐ அதிகாரிகள்போல் நடித்து ரூ.2.85 கோடி பணம் சுருட்டல்

திருவனந்தபுரம்: மத்தியப் புலனாய்வுத் துறை, சுங்கத்துறை அதிகாரிகள்போல் நடித்து, குடியிருப்பாளர்கள் இருவரிடமிருந்து ரூ.2.85 கோடி பணம் சுருட்டிய சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.

அந்த இணைய மோசடிப் பேர்வழிகள், 70 வயதுப் பட்டயக் கணக்காளரிடமிருந்து ரூ.2.25 கோடியையும் வணிகர் ஒருவரிடமிருந்து ரூ.60 லட்சத்தையும் பறித்தனர்.

அவ்விரு அரசாங்க அமைப்புகளின் பெயரில் போலி முதல் தகவல் அறிக்கைகளைக் காட்டி, அவர்கள் பணம் பறித்ததாகச் சொல்லப்படுகிறது.

பணத்தை இழந்த இருவரும் இணையக் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

மோசடிப் பேர்வழிகளில் ஒருவர், மும்பைச் சுங்கத்துறைபோல் பட்டயக் கணக்காளரைத் தொடர்புகொண்டார். அவரது ஆதார் அட்டையையும் மற்ற ஆவணங்களையும் பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு பொதியஞ்சலைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக அந்த மோசடிக்காரர் கூறினார். அதனுள் ஐந்து போலிக் கடப்பிதழ்களும் 75 கிராம் போதைப்பொருளும் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

அதனால், அந்தப் பட்டயக் கணக்காளர் மும்பைக்கு நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பின்னர் ‘ஸ்கைப்’ காணொளிவழி தொடர்புகொண்டு, சிபிஐ அதிகாரி போன்ற தமது போலி அடையாள அட்டையையும் போலி முதல் தகவல் அறிக்கையையும் அவர் அனுப்பி வைத்தார்.

இவ்வழக்கிலிருந்து விடுபட வேண்டுமெனில், தம்மிடம் கறுப்புப் பணமோ சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துகளோ இல்லை என மெய்ப்பிக்க வேண்டும் என்று அந்தப் பட்டயக் கணக்காளரிடம் அவர் சொன்னார். அதற்கு, அவர் தமது வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிரவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பின்னர், அவரது வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தில் 75 விழுக்காட்டை அரசாங்க வங்கிக் கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் விரிவான விசாரணைக்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கி வழியாக அப்பணம் திருப்பித் தரப்படும் என்றும் அவன் கூறினான்.

இதையெல்லாம் கேட்டுச் சந்தேகப்படாத பட்டயக் கணக்காளர், தமது ஆறு வங்கிக் கணக்குகளின் விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். அவற்றிலிருந்து முதல்முறை பணம் மாற்றிவிடப்பட்டதும், அதைப் பெற்றுக்கொண்டதற்காக நிதித்துறையிடமிருந்து அனுப்பியது போன்ற ஒரு போலிக் கடிதத்தை அவன் அனுப்பினான்.

பின்னர் நிதித்துறையிலிருந்து பேசுவதுபோல் இன்னொருவன் தொடர்புகொண்டான். விஷயம் மிகவும் சிக்கலானது எனக் குறிப்பிட்ட அவன், எஞ்சிய பணத்தையும் விரைந்து அனுப்பும்படி கூறினான். அதற்கு இணங்கி, இரண்டு நாள்களில் மொத்தம் 2.25 கோடி ரூபாயை அந்தப் பட்டயக் கணக்காளர் அனுப்பினார்.

மீண்டும் மீண்டும் அவர்கள் பணம் கேட்கவே சந்தேகமடைந்த பட்டயக் கணக்காளர், இணையக் காவல்துறையை நாடினார்.

விசாரணையில் அவரது ஆறு கணக்குகளிலிருந்து அனுப்பப்பட்ட பணம், 36 கணக்குகளுக்கு மாற்றிவிடப்பட்டதும் அவற்றிலிருந்து கிட்டத்தட்ட ரூ.2 கோடி எடுக்கப்பட்டுவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோல, இந்திய ரகசியச் சட்டப்படி வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் சிபிஐ கைதாணை அனுப்பியுள்ளதாகவும் கூறி, வணிகரிடமிருந்தும் நான்கு நாள்களில் ரூ.60 லட்சத்தை மோசடிப் பேர்வழிகள் சுருட்டினர்.

இவ்விரு வழக்குகளிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இணையக் காவல்துறை சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!