கேரளாவில் முதல் ஆளாக புதுக் காரை வாங்கிய ஐஸ்வர்யா லட்சுமி

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் இப்போது புதுக் கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

கையில் பல படங்களுடன் பரபரப்பான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி தற்போது ‘ரேஞ்ச் ரோவர் இவோக் 2024’ என்ற சொகுசுக் காரை வாங்கி இருக்கிறார்.

கேரளாவில் இந்த மாடல் காரை வாங்கும் முதல் நபர் ஐஸ்வர்யா லட்சுமி தானாம்.

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘ஆக்‌ஷன்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா, அடுத்ததாக தனுஷுடன் ‘ஜெகமே தந்திரம்’ படத்தில் நடித்தார்.

இதைத்தொடர்ந்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரக்குமாரி பூங்குழலி வேடத்தில் நடித்து அசத்தினார்.

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஐஸ்வர்யா லட்சுமிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி விஷ்ணு விஷால் ஜோடியாக அவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரிக்குவித்தது.

அடுத்து, தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமான ‘தக்லைஃப்’ படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார் ஐஸ்வர்யா.

இப்படத்தில் ஜெயம் ரவி, கமல்ஹாசன், திரிஷா, துல்கர் சல்மான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!