முப்பது வயதில் தனக்கு திருமண ஆசை ஏற்பட்டது என்றும் இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்றும் நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்துகொள்வதற்கான வயதை தாம் கடந்துவிட்டதாக அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
திருமணமான பின்னரும் பலர் மகிழ்ச்சியின்றிக் காணப்படுவதாக அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர், திருமணம் செய்யாமலேயே மகிழ்ச்சியாக வாழ முடியும் என கூறியுள்ளார்.
“திருமணம் செய்யவில்லை என்பதால் நான் சோகத்தில் இருப்பதாக முடிவு செய்துவிட வேண்டாம். நான் மகிழ்ச்சியாகத்தான் உள்ளேன்.
“முப்பது வயதை எட்டிய போதுதான் எனக்கு திருமண ஆசை தோன்றியது. ஆனால் சூழ்நிலை நான் நினைத்ததற்கு நேர்மாறாக இருந்ததால் திருமணம் செய்து கொள்ளவில்லை,” என்கிறார் ஆண்ட்ரியா.