வட்டார வழக்கில் பேச பயிற்சி பெறும் சாய் பல்லவி

சாய் பல்லவி மீனவர்கள் பேசுவதைப்போல பேசிப் பழக பயிற்சிப் பட்டறையில் சேர்ந்து பேசி வருகிறார்.

நடிகை சாய் பல்லவி இப்போது தெலுங்கில், ‘தண்டேல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நாக சைதன்யா நாயகனாக நடிக்கிறார். சேகர் கம்முலா இயக்கிய ‘லவ் ஸ்டோரி’ படத்திற்குப் பிறகு இவர்கள் இந்தப் படத்தில் மீண்டும் இணைகின்றனர். இந்தப் படத்தில் நாக சைதன்யா மீனவராக நடிக்கிறார். சாய் பல்லவி மீனவப் பெண்ணாக நடிக்கிறார். அதற்காக அவருக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்ட வட்டார வழக்கில் பேசப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குநர் சந்து மொண்டேடி கூறும்போது, “படத்தில் நாயகிக்கும் முக்கியத்துவம் உள்ளது. அதனால் பயிற்சிப் பட்டறைகளில் அவர் கலந்துகொண்ண்டு பயிற்சியாளரிடம் ஸ்ரீகாகுளம் வட்டார வழக்கில் பேச பயிற்சி பெற்றார். சாய் பல்லவி அர்ப்பணிப்போடு அதை கற்றுக்கொண்டார்” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!