உருவக் கேலி அழ வைத்தது: கீர்த்தி பாண்டியன்

உருவக் கேலியை யாரும் அனுமதிக்க கூடாது என்கிறார் கீர்த்தி பாண்டியன். தாம் உருவக் கேலிக்கு ஆளானபோது பலமுறை கண்ணீர் விட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் நீண்டகாலம் ஒல்லியாகவும் கருப்பாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், உருவக்கேலி என்பது ஒருவரை வெகுவாக மனம் நோகச் செய்யும் எனக் கூறியுள்ளார்.

“முன்பெல்லாம் வெயிலில் அதிகம் சுற்றித் திரிவேன். அதனால் கருப்பாக இருந்தேன். இதைப் புரிந்துகொள்ளமல் பலர் எனது தோற்றத்தைக் கிண்டல் செய்தபோது கவலையில் ஆழ்ந்து, அழவும் செய்தேன்.

“ஆனால் இப்போது கடந்த காலத்தைப் பற்றி யோசிக்கும்போது பலருக்கு நன்றி சொல்ல தோன்றுகிறது,” என்று அண்மைய பேட்டியில் கீர்த்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இவர் நடித்துள்ள ‘கண்ணகி’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரைகாண உள்ளது. இந்நிலையில் இவரது கணவரும் நடிகருமான அசோக் செல்வன் நடித்துள்ள ‘சபாநாயகன்’ படமும் அதே தேதியில் வெளியீடு காண்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!