நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது நடிகர் மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.
அண்மையில் திரிஷா குறித்து அவர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை வெடித்தது. அதற்காக மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்நிலையில், திரிஷா மீது மட்டுமன்றி, அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோரும் தமக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கக் கோரி வழக்கு தொடுத்துள்ளார் மன்சூர்.