தன்னை பற்றி மிக மோசமான வதந்திகள் பரப்பப்பட்டதாகச் சொல்கிறார் நடிகை அனுயா.
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’மதுரை சம்பவம்’. ’நண்பன்’, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். எனினும் இன்ஸ்டகிராமில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
“என்னை விஜய் ஆன்டனி, சுந்தர் சி, ஜீவா ஆகியோருடன் இணைத்துப் பேசினர். ஆனால் அவை எல்லாமே தவறான தகவல்கள்.
“நான் இன்னமும் தனியாகத்தான் உள்ளேன். என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை. அவ்வாறு இருந்து இருந்தால் எப்போதே திருமணம் செய்து கொண்டிருப்பேன்,” என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் அனுயா.