புயலால் சோகத்தில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’

‘மிச்சாங்’ புயலால் நயன்தாரா எதிர்பார்த்த ஒன்று நடக்காமல் போய்விட்டது. அதனால் அவர் சோகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய முக்கிய கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி வைத்த நயன்தாரா, முதல் படத்திலேயே தனக்கான ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.

அவரது நடிப்பைப் பார்த்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் தரலாம் என்ற யோசனையில் இருக்கிறார்கள். ரன்வீர் சிங் நடிக்கவிருக்கும் ஒரு படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட் பக்கம் சென்றாலும் தமிழிலும் அவர் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார். அந்த வகையில் தமிழில் ‘இறைவன்’ படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்தது.

அதனையடுத்து ‘அன்னபூரணி’ படத்தில் நடித்திருக்கிறார். இது அவருக்கு 75வது படம். இதுதவிர ‘மண்ணாங்கட்டி’ என்ற படத்திலும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

பாலிவுட்டில் வெற்றிப் படத்தைக் கொடுத்துவிட்டதால் நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தி ‘அன்னபூரணி’ படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் அடுத்த இந்தி படத்திற்கு 10 கோடி ரூபாய் வாங்கலாம் என்ற கணக்கை அவர் போட்டிருந்ததாகவும் ஒரு தகவல் உலாவுகிறது. ஆனால் ‘மிச்சாங்’ புயல் அவரது கணக்கை பொய் கணக்காக்கிவிட்டதாம்.

அதாவது ‘அன்னபூரணி’ படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தாராம் நயன். நல்ல கதைக்களம்; நிச்சயம் வெற்றி பெறும். எனவே தைரியமாக பத்து கோடி ரூபாயை அடுத்தடுத்த படங்களில் கேட்கலாம் என்று எண்ணியிருந்த சூழலில் ‘மிச்சாங்’ புயலால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ‘அன்னபூரணி’ படத்தைப் பார்க்க திரையரங்கில் கூட்டம் அவ்வளவாக இல்லை.

மேலும் இந்தப் படத்திற்கு சரியாக விளம்பரம் செய்யப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதனால் படம் அதிகப்படியான ரசிகர்களைச் சென்று சேரவில்லை.

படம் வெளியான முதல் இரண்டு நாள்களில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. ஆனால் திடீரென மழை, அதனால் வெள்ளம் என்பதால் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் இருந்ததால் கூட்டம் குறைந்து, வசூலும் மோசமானது.

இதுவரை மொத்தமே இரண்டு கோடி ரூபாய் மட்டும்தான் வசூலித்திருக்கிறதாம். தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தைக்கூட படம் வசூலிக்காததால் அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை 10 கோடி ரூபாயாக வாங்க முடியாதோ என்ற சோகத்தில் அவர் இருப்பதாக திரையுலகத்தில் முணுமுணுப்பு எழுந்திருக்கிறது.

இதனிடையே, அடுத்ததாக தன்னுடைய கணவரும் பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நயன்தாரா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள நிலையில், அவருக்கு அக்காவாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக அஜித் படத்தை இயக்க இருந்த விக்னேஷ் சிவன், அந்தப் படத்திலிருந்து விலகிய நிலையில், தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நயன்தாராவும் இணைகிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தப் படத்திற்கு ‘LIC-லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் இளம் நடிகை நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!