உக்ரேன்மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்

கியவ்: ரஷ்யா திங்கட்கிழமை அதிகாலை உக்ரேனின் பெரும்பான்மையான பகுதிகள்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்களைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாகவும் குடியிருப்புப் பகுதிகள், வணிக வளாகங்களைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரேனின் தென் மத்திய நகரமான கிரிவ் ரீயில் வணிக வளாகம் ஒன்றும், 20க்கும் மேற்பட்ட தனியார் கட்டடங்களும் இத்தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக அந்நகர ஆளுநர் செர்ஹி லிசாக் தெரிவித்தார். அந்நகருக்கு வெளியே 62 வயதான ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மக்களை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாக டெலிகிராமில் திரு லிசாக் கூறினார்.

உக்ரேன் முழுவதும் திங்கட்கிழமை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வான் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உக்ரேனில் நிலவும் கடும் பனிப்பொழிவுக்கிடையே இத்தாக்குதல்கள் நடந்தன.

அண்மை வாரங்களாக ரஷ்யா, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அது ஆக்கிரமித்த பகுதிக்கு வெகு தொலைவில் அமைந்துள்ள உக்ரேனிய மக்கள் நிலையங்கள்மீது வான்வழித் தாக்குதல்களை மீண்டும் நடத்த தொடங்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!