சோல்: தென்கொரியாவின் குறைந்த குழந்தை பிறப்பு விகிதத்துக்குத் தீர்வு காணும் வகையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மில்லியன் வொன் (S$99,000) ரொக்கச் சலுகை வழங்வது குறித்து அந்நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக தென்கொரிய மக்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ள அந்நாட்டின் ஊழல் தடுப்பு, குடியுரிமை ஆணையம் ஆய்வு நடத்தி வருகிறது.
குழந்தை பிறப்பை ஊக்குவிக்க தென்கொரியா நடைமுறைப்படுத்தியுள்ள ஊக்குவிப்புகள் மறுஆய்வு செய்யப்படும் என்றும் நேரடி நிதிச் சலுகை மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா என்பதைக் கண்டறிய ஆய்வு நடத்தப்படும் என்றும் ஆணையம் கூறியது.
தென்கொரியாவின் குழந்தைப் பிறப்பு விகிதம் 2023ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவு சரிந்தது.
2024ஆம் ஆண்டில் இது மேலும் குறையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.