வங்கி நொடித்துப்போகாமல் இருக்க உதவிக்கரம் நீட்டும் வியட்னாம்

ஹனோய்: வியட்னாமிய வரலாற்றிலேயே ஆகப் பெரிய நிதி மோசடியின் காரணமாக அந்நாட்டின் சைகோன் கூட்டுப் பங்கு வர்த்தக வங்கி நொடித்துப்போகும் நிலையில் உள்ளது.

அந்த வங்கி நொடித்துப்போகாமல் இருக்க வியட்னாமிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள வங்கிக்கு வியட்னாமின் மத்திய வங்கி இம்மாதம் 24 பில்லியன் அமெரிக்க டாலர் (S$32.8 பில்லியன்) வழங்கியுள்ளது.

இத்தகைய உதவியை வியட்னாமிய அரசாங்கம் செய்திருப்பது இதுவே முதல்முறை.

கடந்த பத்தாண்டுகளாக சைகோன் வர்த்தக வங்கியிலிருந்து பேரளவில் பணம் கையாடிய குற்றத்துக்காக அந்நாட்டைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தரான 67 வயது டுரோங் மை லானுக்கு ஏப்ரல் 11ஆம் தேதியன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றங்களின் விளைவாக ஏறத்தாழ 27 பில்லியன் அமெரிக்க டாலர் (S$36.5 பில்லியன்) இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!