உக்ரேனுக்கு $5.6 பில்லியன் உதவி கேட்கும் ஐநா

ஜெனிவா: உக்ரேனுக்கு இவ்வாண்டு மனிதாபிமான உதவி வழங்கவும் அந்நாட்டைவிட்டுத் தப்பியோடிய மில்லியன்கணக்கான அகதிகளுக்குக் கைகொடுக்கவும் 4.2 பில்லியன் அமெரிக்க டாலர் (5.6 பில்லியன் வெள்ளி) தேவைப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) தெரிவித்துள்ளது.

அண்மைக் காலமாக காஸா போர் மீது அதிக கவனம் இருந்துவரும் நிலையில் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் உக்ரேன் போர் மூன்றாம் ஆண்டை எட்டவுள்ளது.

உக்ரேனில் உள்ள 8.5 மில்லியன் மக்களுக்கும் கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் 2.3 மில்லியன் அகதிகள் மற்றும் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் சமூகங்களுக்கும் உதவுவது ஐநாவின் இலக்கு.

உக்ரேனில் இவ்வாண்டு 14.6 மில்லியன் பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும் என்று ஐநா தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அந்நாட்டு மக்கள்தொகையில் 40 விழுக்காடாகும்.

அவர்களில் ஆக அதிக உதவி தேவைப்படும் 8.5 மில்லியன் மக்களுக்குக் கைகொடுக்க ஐநா எண்ணம் கொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!