புத்ராஜெயா: மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீனின் மனைவி, இரு மகன்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பியது.
இதைத் திரு டயிமின் வழக்கறிஞர் திரு ராஜேஷ் நாகராஜன் உறுதி செய்தார்.
ஜனவரி 10ஆம் தேதி காலை 10.30 அளவில் ஆணையத்தின் தலைமையகத்தில் திரு டயிமின் மனைவி நயிமாகாலித்தும் அவர்களுடைய இரு மகன்களும் இருப்பர் என்று அவர் கூறினார்.
அதேபோல திருவாட்டி நயிமாவும் அவரது இரு மகன்களும் விசாரணைக்காக ஆணையத்தின் தலைமையகத்துக்குச் சென்றனர்.
கடந்த மாதம் திரு டயிம் மீதான விசாரணை தொடர்பாக அவரது குடும்பத்துக்குச் சொந்தமான இல்ஹம் டவர் கட்டடம் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.
அதுதொடர்பாக திரு நயிமாவிடமும் அவரது இரு மகன்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆணையத்துக்குத் தங்களது முழு ஒத்துழைப்பைத் தரப்போவதாக திருவாட்டி நயிமா கூறினார்.
விசாரணையைப் பற்றி கருத்து தெரிவித்த திருவாட்டி நயிமா, தமது கணவர் 1984ஆம் ஆண்டில் அரசாங்கத்தில் இணைந்ததாகவும் அவர் அதற்கு முன்பே வாழ்வில் வெற்றிபெற்று உச்சம் தொட்டுவிட்டதாகவும் கூறினார்.
விசாரணைக்காக ஆணையத்தின் தலைமையகத்துக்கு மறுநாள் வரச்சொல்லி ஜனவரி 8ஆம் தேதியன்று ஆணையம் தம்முடன் தொடர்புகொண்டு தெரிவித்ததாகத் திருவாட்டி நயிமா கூறினார்.
தமக்குப் போதுமான கால அவகாசம் தரப்படவில்லை என்றும் இன்னொரு நாள் விசாரணைக்காக வர அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்திடம் தாம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.