சீனாவின் முதலீடுகளை ஈர்க்கும் மாலத்தீவு

பெய்ஜிங்: சீனாவின் ஃபூஜோ நகரில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) அன்று மாலத்தீவு அதிகாரிகள் ஒரு முதலீட்டு சந்திப்பை நடத்தியுள்ளனர்.

முதலீட்டு சந்திப்பு முடிந்த பின் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சுவும் அவரது தலைமையிலான பேராளர் குழுவும் சீன அதிபர் சி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளனர். சீனப் பிரதமர் லி சியாங்கையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர்.

மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு சீனாவுக்கு ஒரு வாரம் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முடிவில் சில உடன்பாடுகளும் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பூசல் எழுந்துள்ள நிலையில் சீனாவுடன் மாலத்தீவு மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.

முகம்மது முய்சு இந்தியாவின் ஆதிக்கம் மாலத்தீவில் அதிகமாக உள்ளதாக நவம்பர் மாத தேர்தல் பிரசாரத்தில் குறைகூறியிருந்தார். அண்மையில் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை மூட அவரது அரசாங்கம் உத்தரவிட்டது.

மேலும் சில நாள்களுக்கு முன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் விதமாக மாலத்தீவின் மூன்று துணை அமைச்சர்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டனர். அது பெரும் சர்ச்சையாக வெடித்து இரு நாடுகளுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!