வடகாஸாவுக்கான மருத்துவ உதவிகளை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம்

ஜெனிவா: வடகாஸாவுக்குள் மருத்துவ உதவிகளை அனுப்பவிருந்த உலகச் சுகாதார நிறுவனம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரப்படாத காரணத்தால் அதை நிறுத்தியுள்ளது.

அந்த மருத்துவபொருள்கள் அல்அவ்தா மருத்துவமனைக்கும், மற்றொரு மருந்தகத்திற்கும் கொண்டு செல்ல இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகாஸாவுக்குள் மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்ல முடியாமல் போவது இது நான்காவது முறையாகும்.

வடகாஸாவுக்கு உதவிகள் சென்று 12 நாள்கள் ஆகிறது. கடுமையான வெடிகுண்டுத் தாக்குதல்கள், நடமாட்டக் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் தெளிவான தகவல்கள் இல்லாத காரணத்தால் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி இந்த முடிவை எடுத்ததாக உலக சுகாதார நிறுவனம் சமூக ஊடகம் வழி தகவல் வெளியிட்டது.

5 மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவப் பொருள்களை ஜனவரி 7ஆம் தேதி அனுப்ப திட்டமிடப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது.

சரியான நேரத்திற்கு மருத்துவ உதவிகள் கிடைக்காவிட்டால் வடகாஸாவில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் செய்வது அறியாது பொதுமக்கள் கலங்கி நிற்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!