அன்வார்: ஊழலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

கோலாலம்பூர்: குறிப்பிட்ட சிலருக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தும்போது அதை அரசியலாக்கக்கூடாது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

தனிநபர், கட்சி விசுவாசம் இருப்பது இயல்பு என்றபோதும், அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார் திரு அன்வார்.

“முக்கியமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்போது, அது சர்ச்சைக்குரிய விவகாரமாகிறது. அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாக விசாரணைக்கு எதிராக சவால் விடுக்கப்படும். தனிநபர் ஒருவருக்கு அல்லது கட்சிக்கு விசுவாசமாக இருப்பது அவரவர் உரிமை.

“ஆனால் ஆதாரங்கள் இருந்தால் அவர் யாராக இருந்தாலும் சரி. அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்றார் பிரதமர் அன்வார்.

பல ஆண்டுகளாகச் சிறையில் இருந்தது தமக்குப் பலனைத் தந்துள்ளதாக திரு அன்வார் குறிப்பிட்டார். தமக்குப் பயம் என்பதே என்னவென்று தெரியாமல் போய்விட்டதாக அவர் கூறினார்.

“எனக்குப் பயம் அறவே இல்லாமல் போய்விட்டது. எனவே, நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது கண்டிப்பாக மேற்கொள்ளப்படும். ஊழல் குற்றங்கள் சகித்துக்கொள்ளப்படாது. ஊழலில் ஈடுபவோர் என்னை ஆதரிப்பவராகவோ அல்லது எதிர்ப்பவராகவோ இருந்தாலும் சரி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முடிவை மாற்றிக் கொள்ளமாட்டேன்,” என்றார் திரு அன்வார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!