ஜப்பான் நிலநடுக்கம்: காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியது

தோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 168 பேர் மாண்டனர். இந்நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 323ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதேநேரம் மீட்பு பணிகளுக்கு இடையூறாக கடும் பனி பொழிந்து வருகிறது.

சாலைகள் உடைந்துள்ளதால் 2,000க்கும் அதிகமான மக்களைத் தொடர்புகொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கி வருகின்றனர்.

சூசு நகரில் இடிபாடுகளுக்கு இடையில் 5 நாள்கள் சிக்கியிருந்த 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

தற்போது சில இடங்களில் மழை பெய்து வருவதால் நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் கவலைத் தெரிவித்துள்ளனர். சரிந்துள்ள கட்டடங்களின் மீது கடுமையான பனி படர்வதால் அவை ஆபத்தாக மாறலாம் என்று அவர்கள் கூறினர்.

இ‌ஷிகாவா பகுதியில் 18,000க்கும் அதிகமான வீடுகளில் இன்னும் மின்சாரம் இல்லை. மேலும் 66,000க்கும் அதிகமான வீடுகளில் தண்ணீர் சேவைகள் பழைய நிலைக்கு திரும்பவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!