புயலுக்குப் பின் கனமழை: தீரா துயரத்தில் ஆஸ்திரேலிய கிழக்குக் கரையோர மக்கள்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் ஞாயிறன்று கனமழை பெய்தது.

இதனால் அப்பகுதியில் வெள்ளம், சாலைகள் நீரில் முழ்கின. இதனால், அங்கு கிறிஸ்துமஸ் விழாக்காலத்தில் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியான நியூ சவுத் வேல்ஸ், தென்கிழக்கு பகுதியான குவீன்ஸ்லாந்து ஆகியவற்றில் ஜனவரி 1ஆம் தேதியன்று வழக்கமாக ஒரு மாதம் முழுக்க பெய்ய வேண்டிய மழை அன்று நாளில் பெய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதுபோல் ஜனவரி 2ஆம் தேதியும் கனமழை பெய்யும் என்று வானிலை கணிப்புகள் கூறுகின்றன. மழையின் அளவு 250 மில்லி மீட்டர் என்றும் இது ஜனவரி மாத சராசரி மழையை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து எக்ஸ் சமூக ஊடகத்தில் காணொளி வழி தகவல் பதிவிட்ட வானிலை பிரிவு செய்தியாளரான மிரியம் பிராட்புரி, “நிலைமை ஆபத்து மிகுந்ததாக உள்ளது. இங்கு பொழியக்கூடிய கடும் மழை அநேகமாக நாள்முழுவதும் புயல்காற்றுடன் கலந்து வருவதுடன் அதனால் ஏற்படும் திடீர் வெள்ளம் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக அமையலாம்,” என்றார்.”

சுற்றுப்பயணிகள் அதிகம் வருமையளிக்கும் கோல்ட் கோஸ்ட் பகுதிதான் அதிக பாதிப்பு அடைந்திருப்பதாக அவர் கூறினார். இங்கு வெள்ள நீர் நிறைந்த சாலைகளில் பல வாகனங்கள் முடங்கியிருப்பதாக சமூக ஊடகங்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!