தாய்லாந்து வெள்ளத்தில் அறுவர் மாண்டனர்; பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு

பேங்காக்: தெற்குத் தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் குறைந்தது ஆறு பேர் உயிர் இழந்துவிட்டனர். பல்லாயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிசம்பர் 22ஆம் தேதி தொடங்கிய வெள்ளத்தில், சத்துன், சொங்க்லா, பட்டாணி, யாலா, நராத்திவாட் ஆகிய மாநிலங்களில் 70,000க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வட்டார அதிகாரிகள் கூறினர்.

நராத்திவாட்டில் 89 வயது மாது, ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் உயிர் இழந்ததாக மாநிலத் துணை ஆளுநர் ப்ரீச்சா நுவால்நொய் சொன்னார்.

பல நாள்கள் நீடித்த கடும் மழையைத் தொடர்ந்து மேலும் ஒருவரை இன்னும் காணவில்லை. அந்த மழையால் சில இடங்களில் வெள்ளநீர் 3 மீட்டர் உயரம்வரை எட்டியதாக அவர் கூறினார்.

சாலைகள் சேற்றில் மூழ்கியிருந்ததையும், குடியிருப்பாளர்கள் கூரைகளில் அடைக்கலம் நாடியதையும் உள்ளூர் ஊடகங்களின் காணொளிகள் காட்டின.

மீட்புக் குழுக்கள் இரவு முழுதும் பணியாற்றி தண்ணீர் போத்தல்களையும் நொறுக்குத் தீனிகளையும் வழங்கின. அவை உயிருடற் சேதங்களுக்குக் கட்டடங்களையும் சோதித்தின.

டிசம்பர் 27ஆம் தேதி காலை நிலவரப்படி, நீர் அளவு குறைந்திருப்பதாக தாய்லாந்தின் பேரிடர் தடுப்பு மீட்புப் பிரிவு தெரிவித்தது.

தாய்லாந்தின் பொதுச் சுகாதார அமைச்சு வெள்ள நிலைமையை அணுக்கமாகக் கவனித்து வருவதாக பொதுச் சுகாதார அமைச்சர் சொல்நான் ஸ்ரீகேயு கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!