கம்போடியாவில் 1.5 டன் போதைப்பொருள் பறிமுதல்; வெளிநாட்டவர் ஐவர் கைது

போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின்பேரில் வெளிநாட்டவர் ஐவர் கம்போடியாவில் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 22) பிடிபட்டனர்.

மொத்தம் 1.51 டன் எடையுள்ள போதைப்பொருள்கள் சிக்கியதாக கம்போடிய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு புதன்கிழமை (ஜனவரி 24) ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தது.

லாவோசிலிருந்து அவை கம்போடியாவிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவை தைவானில் விநியோகிக்கப்பட இருந்ததாகவும் கூறப்பட்டது.

திங்கட்கிழமை அதிகாலை 3.15 மணியளவில், மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளின்போது அந்த ஐந்து ஆடவர்களும் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் மூவர் சீனர், இருவர் தைவானியர்.

அவர்களிடமிருந்து இரண்டு மீன்பிடிப் படகுகள், ஒரு கார், ஒரு மோட்டார்சைக்கிள், எட்டுக் கைப்பேசிகள் ஆகியவற்றையும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கைப்பற்றியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!