தென்கொரியாவுடன் வானொலி ஒலிபரப்புகளை நிறுத்துகிறது வடகொரியா

சோல்: தென்கொரியாவில் உள்ள தனது வேவு அதிகாரிகளுக்குக் குறிமுறை மூலம் செய்திகளை அனுப்பும் வானொலி நிலையம் ஒன்றின் செயல்பாட்டை வடகொரியா நிறுத்தியுள்ளது.

யோன்ஹாப் செய்தி நிறுவனம் அத்தகவலைத் தெரிவித்தது.

வடகொரியா அண்மைய வாரங்களாக சோல் மீதான நெருக்குதலை அதிகரித்துவருகிறது. தென்கொரியாவுடன் என்றுமே ஒன்றிணையாது என்று வடகொரியா கூறியுள்ளது.

அதோடு, அமெரிக்காவிலும் பசிஃபிக்கில் உள்ள அதன் நட்பு நாடுகளிலும் அணுவாயுதத் தாக்குதலை நடத்துவதற்கான தனது ஆற்றலை வலுப்படுத்த வடகொரியா உறுதிதெரிவித்துள்ளது.

‘ரேடியோ பியோங்யாங்’ எனும் அந்த வானொலி நிலையம் கடந்தகாலத்தில் தென்கொரியாவில் உள்ள பியோங்யாங்கின் வேவு அதிகாரிகளுக்குக் குறிமுறை மூலம் செய்திகளை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த வானொலி நிலையத்தின் இணையத்தளமும் ஜனவரி 13ஆம் தேதி செயல்படவில்லை.

அதே நாள் முற்பகுதியில், தென்கொரியாவுடனான பொதுமக்கள் பரிமாற்றங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைப்புகளைக் கலைப்பதற்கான திட்டங்களையும் வடகொரியா அறிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!