பறக்கும் விமானத்திலிருந்து அவசரகால சறுக்கு விழுந்த சம்பவம் குறித்து விசாரணை

வாஷிங்டன்: அவசரகாலங்களில் விமானத்தை விட்டு வெளியேறப் பயன்படுத்தப்படும் சறுக்கு, ‘டெல்டா ஏர்லைன்ஸ்’ விமானம் ஒன்றிலிருந்து விழுந்த சம்பவம் அமெரிக்காவில் ஏப்ரல் 26ஆம் தேதி நிகழ்ந்தது.

நியூயார்க் நகரிலிருந்து லாஸ் ஏஞ்சலிசுக்குப் புறப்பட்ட அந்த விமானத்தில் 183 பேர் பயணம் செய்தனர்.

அப்போது சறுக்கு விழுந்த காரணத்தால் விமானம் மீண்டும் ஜான் எஃப் கென்னடி அனைத்துலக விமான நிலையத்திற்குத் திரும்பிவிட்டது.

தற்போது சேவை வழங்குவதிலிருந்து அந்த விமானம் அகற்றப்பட்டுள்ளதாகவும் விமானம் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மதிப்பிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் போக்குவரத்துத் துறையின்கீழ் இயங்கிவரும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!