அமெரிக்காவின் ஜெனரல் எலக்டிரிக் நிறுவனமும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் இணைந்து போர் விமானங்களைத் தயாரிப்பதற்காக நடந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருப் பதாக அறியப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தம், இம்மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் செல்லும்போது கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருதரப்பு நவீன தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக ஜெனரல் எலக்டிரிக் நிறுவனத்தின் நவீன ‘எஃப்414’ இயந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் போர் விமானங்களில் பொருத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வார முற்பகுதியில் இந்தியாவுக்கு வருகையளித்த அமெரிக்க தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், ஒப்பந்தம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் இந்த ஒப்பந்தத்தை இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ இதுவரை மறுக்கவோ ஆமோதிக்கவோ இல்லை.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் பிரதமர் மோடிக்கு முக்கிய வெற்றியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.