27 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய வயதில் போதைப்பொருளுக்கு அடிமையாகி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் திருந்திய கேரொல் வீ, 42, என்னும் பெண்மணி கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார். தாம் 12 வயதாக இருந்தபோது கஞ்சா உட்கொள்ளத் தொடங்கி மூன்றாண்டுகள் அந்தப் பழக்கம் நீடித்ததாகவும் போதைப் பொருள் விருந்துகளில் கலந்துகொள்ளத் தொடங்கியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். தமது 15வது வயதில் ஹெராயின் போதைப்பொருளை தமது காதலன் தமக்கு அறிமுகம் செய்ததாகவும் ஒருநாள் தமது கைப்பையில் ஹெராயின் இருந்ததைக் கண்டு அதிர்ந்த தமது சித்தி காவல்துறையை வரவழைத்ததாகவும் திருவாட்டி வீ கூறினார்.
“அந்த வயதில் எனது சித்திமீது ஆத்திரம் ஏற்பட்டது. ஆனால், அவர் எனது நன்மைக்காகத்தான் அவ்வாறு செய்தார் என்பதை பின்னர் உணர்ந்தேன். இளையர்கள் எவ்வளவு எளிதில் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள் என்பதை அறிந்துகொண் டேன்,” என்றார் அவர்.