இந்தியா

கோல்கத்தா: உள்ளாட்சிப் பணி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக மேற்கு வங்க அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம், திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஒரு சடலத்தை மூன்று காவலர்கள் கால்வாயில் வீசிய காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
மும்பை: நடிகர் ஷாருக்கான் அண்மையில் அட்லீ இயக்கத்தில் நடித்து வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அதேபோல் ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான் படமும் ஆயிரம் கோடி வசூலித்தது.
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு, பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டுவது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.