இளையர் முரசு

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான ‘நாசா’ வழங்கும் ‘ஸ்கேன்’ (NASA SCaN) உபகாரச் சம்பளத்தைப் பெற்ற முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையை 2021இல் பெற்ற இளம் பொறியாளர் சினேகா மணிமுருகன், 27, தற்போது தன் துறையில் மேலும் ஒரு படி முன்னேறியுள்ளார்.
ராஜயோக சக்தி ஆழ்நிலை (ஆர்பிடி) சிங்கப்பூர் தியான இயக்கத்தின் மாணவர் சங்கம் (15 முதல் 25 வயது வரை உள்ளடங்கியோர்​) பொதுமக்களிடையே சுற்றுப்புற விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
சிறுவயதில் கபடி விளையாட்டிற்கு அறிமுகமானபோது, அதில் ஆர்வத்தையும் திறனையும் வளர்க்க உதவும் தளம் எதுவும் இல்லாமல் வருந்திய இளையர்கள், அதே நிலையிலுள்ள இக்கால மாணவர்களைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூர் கபடிச் சங்கத்தைத் தொடங்கினர். 
ராணுவத் துறையில் காவலற்படையில் இருந்த தன் தந்தை சென்ற பாதையில் தாமும் பயணிக்க வேண்டும் என்று விரும்பிய 23 வயது லெஃப்டினென்ட் தீபா சியாமா அருள், அண்மையில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையில் விமானப் போர்த்திறன் அதிகாரியாக (ABM) அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டார்.
இளங்குற்றவாளிகள் தவறான நடத்தை தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவதற்குப் பதிலாக அவர்கள் சமூகத்தில் ஒருங்கினைக்கப்படுவதற்காக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.