புதுடெல்லி: ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்ற 19வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது.
அந்தப் போட்டியில் முதலில் பந்தடித்த பெங்களூரு போராடி 20 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக விராத் கோஹ்லி சதமடித்து (113 ஓட்டங்கள்) அணித்தலைவர் டு பிளேஸிஸ் 44 ஓட்டங்களை எடுத்தனர்.
ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹால் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 184 ஓட்டங்களைத் துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார்.
ஆனாலும் 2வது விக்கெட்டுக்கு 148 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அணித்தலைவர் சஞ்சு சாம்சன் அதிரடியாக 69 ஓட்டங்களைக் குவித்து வெற்றியை உறுதிசெய்து ஆட்டமிழந்தார்.
அப்போது ரியன் பராக் 4, துருவ் ஜுரேல் 2 ஓட்டங்களில் வெளியேறி எமாற்றத்தை கொடுத்தனர்.
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அடுத்து வந்த சிம்ரோன் ஹெட்மயர் அதிரடியாக 11 ஓட்டங்களை எடுத்ததால், பட்லர் சதத்தை நெருங்குவாரா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் ஓர் ஓட்டம் தேவைப்பட்டபோது சிக்ஸர் அடித்த அவர் தன்னுடைய 6வது ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து சாதனை படைத்தார்.
அத்துடன் ஐபிஎல் தொடரில் தன்னுடைய 100வது போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையும் படைத்த பட்லர், 19.1 ஓவரில் ராஜஸ்தானை வெற்றிபெற வைத்தார்.
அதனால் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இந்நிலையில் கடைசி பந்தில் சரியாக டைமிங் கொடுக்காத போதிலும் அதிர்ஷ்டத்தின் உதவியால் பந்து பவுண்டரிக்கு சென்று தமக்கு சதத்தை கொடுத்ததாக ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.