லண்டன்: ஆர்சனல் குழுவின் நிர்வாகியான மிக்கல் ஆர்டெட்டா மீது காற்பந்து சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மையில் ஆர்சனல் அணி நியூகாசல் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
அந்த ஆட்டத்தில் ஆர்சனல் அடித்த கோல் ‘விஏஆர்’ எனப்படும் காணொளி உதவி நடுவர் தொழில்நுட்பம் மூலம் நிராகரிக்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த ஆர்டெட்டா போட்டி முடிந்த பின் ஆட்ட நடுவர்களை கடுமையாக கண்டித்தார்.
விதிமுறைகளை மீறி ஆட்ட நடுவர்களை அவமதித்ததாக ஆர்டெட்டா மீது காற்பந்து சங்கம் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.
குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க நவம்பர் 21ஆம் தேதிவரை ஆர்டெட்டாவுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.