கொழும்பு: ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கும் பங்ளாதேஷ் அணிக்கும் இடையிலான சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் பங்ளாதேஷ் வெற்றி பெற்றது.
இந்நிலையில், அந்த ஆட்டத்தில் இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்கள் பந்து வீசி 53 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜடேஜா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜடேஜா ஏழாவது வீரராக இணைந்துள்ளார்.
முதல் ஆறு இடங்களில் அனில் கும்ப்ளே 334 விக்கெட்டுகள், ஜவஹல் ஸ்ரீநாத் 315 விக்கெட்டுகள், அஜித் அகர்கர் 288 விக்கெட்டுகள், ஜாகீர் கான் 269 விக்கெட்டுகள், ஹர்பஜன் சிங் 265 விக்கெட்டுகள், கபில் தேவ் 253 விக்கெட்டுகள் எடுத்து உள்ளனர். இந்த வரிசையில் ஜடேஜா ஏழாவது வீரராக பட்டியலில் இடம்பெறுகிறார்.