$3 பில்லியன் பணமோசடி வழக்கு: ஆடவர்மீது மேலும் 5 குற்றச்சாட்டுகள்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியனுக்கும் அதிகமான பணமோசடி வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளில் ஒருவரான சீன குடிமகனான 45 வயது ஜாங் ருய்ஜின்மீது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26ஆம் தேதி) சுமத்தப்பட்டன.

ஜாங் தனது குற்றத்தை ஏப்ரல் 30ஆம் தேதி ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலையான ஜாங்மீது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியை ஏமாற்றுவதற்காக போலி ஆவணத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் புதிய குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டது.

$36 மில்லியன் பணத்தை வைத்திருந்ததாக ஜாங்மீது நான்கு புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்தப் பணம் குற்றச்செயலில் ஈடுபட்டதால் கிடைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சிஐஎம்பி வங்கியை ஏமாற்றுவதற்காகப் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக மூன்று குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன.

மொத்தமாக, எட்டுக் குற்றச்சாட்டுகளைத் தற்போது ஜாங் எதிர்கொள்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!