உயிரணு இறைச்சி வகையை சிங்கப்பூரில் விற்பனை செய்ய 2020ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டது.
விலங்குகளின் உயிரணுக்களைக் கொண்டு இந்த இறைச்சி வகை கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ‘ஈட் ஜஸ்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், சிங்கப்பூரில் இயங்குவதை இந்த நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
‘ஈட் ஜஸ்ட்’ நிறுவனத்தின் இந்த இறைச்சி வகை பிடோக் ஃபூட் சிட்டியில் உள்ள அதன் தயாரிப்பு நிலையத்தில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தத் தயாரிப்பு நிலையம் 2023ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அது தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தயாரிப்பு நிலையம் $61 மில்லியன் செலவில் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு இயக்குமுறை குறித்து மதிப்பீடு செய்வதாகவும் இதைவிட பெரிய உத்திபூர்வ அணுகுமுறையை ஆராய்வதாகவும் ‘ஈட் ஜஸ்ட்’ நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.