‘உரிமம் பெற்ற இடங்களில் செல்லப்பிராணிகளை தங்க வைக்கவும்’

செல்லப் பிராணிகளை உரிமம் பெற்ற இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்று விலங்குநல மருத்துவச் சேவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

உரிமம் இல்லாத தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்ட நாய் ஒன்று இறந்ததைத் தொடர்ந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விளக்கம் கேட்டது. இதையடுத்து அந்த ஆலோசனைக் குறிப்பை விலங்குநல மருத்துவச் சேவை வெளியிட்டது.

‘மிசோ’ எனும் நான்கு வயது நாய் ஜனவரி 2ஆம் தேதி இறந்தது.

சிராங்கூன் கார்டன்ஸில் உள்ள உரிமம் பெறாத இடத்தில் ‘மிசோ’ தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த பராமரிப்பு நிலையத்தின் பெயரை மிசோவின் உரிமையாளர்கள் வெளியிடவில்லை.

திருமதி ஜெஸ்ஸிகாவும் அவரது கணவர் ஸ்டீவன் புவாவும் 2023 டிசம்பர் 27ஆம் தேதி நாயை தங்குமிடத்தில் தங்க வைத்துவிட்டு தைவான் விடுமுறையை முடித்துகொண்டு ஜனவரி 5ஆம் அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் ஜனவரி 2ஆம் தேதி தங்குமிடத்திலிருந்து அவர்களுக்கு அழைப்பு வந்தது.

அப்போது நாய் இறந்துவிட்டதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அசைவற்றுக் கிடந்த மிசோவை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது இதயத்துடிப்பும் சுவாசமும் இல்லை என்று கால்நடை மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து விலங்குநல மருத்துவச் சேவை விசாரணை நடத்தி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!