செங்காங் வாகன நிறுத்துமிடத்திலிருந்து மோட்டார்சைக்கிளைத் திருடியவர் கைது

செங்காங் வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து மோட்டார்சைக்கிளைத் திருடிய சந்தேகத்தின்பேரில் 37 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக திங்கட்கிழமை (ஜனவரி 29) காவல்துறை தெரிவித்துள்ளது.

மோட்டார்சைக்கிள் ரிவர்வேல் டிரைவிலிருந்து திருடப்பட்ட தகவல், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.25 மணியளவில் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை கண்காணிப்புப் படக்கருவிகள் பதிவான காட்சிகளைப் பயன்படுத்தி, திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவரை அதிகாரிகள் அடையாளம் கண்டு திங்கட்கிழமை ( ஜனவரி 29) கைது செய்தனர்.

ஈசூன் ரிங் ரோட்டில் அந்த மோட்டார்சைக்கிள் மீட்கப்பட்டது.

வாகனத்தைத் திருடியதாக அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!