கடந்த 2023ஆம் ஆண்டு தேசிய கலைகள் மன்றம் நடத்திய தங்க முனைப் போட்டிகளில் கவிதைப் பிரிவில் முதல் பரிசை வென்ற திருவாட்டி கங்காவின் கவிதைப் படைப்பு ‘நதியோடு கவிப்பொழுது’. நிகழ்ச்சியில் தமது கவிதைகளைப் பின்னணி இசையுடன் படைக்கவிருக்கிறார் கங்கா.
எஸ்பிளனேட் திறந்தவெளி அரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 24ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெறும்.
இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை, 8.00 மணி முதல் 8.30 மணி வரை என இரு காட்சிகளாக கவிதைப் படைப்பு இடம்பெறும்.
இந்நிகழ்ச்சியை எஸ்பிளனேட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அனுமதி இலவசம்.