ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத் தேர்தல் அதிகாரி ரொனால்ட் ரோஸ் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறியபோது, “ஹைதராபாத் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 201 பேர் மத்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்,” எனத் தெரிவித்தார்.
“கடந்த ஐந்து ஆண்டுகளில் 47,741 பேர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்து 39 ஆயிரத்து 801 பேர் இன்னபிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்து உள்ளனர். 54 ஆயிரத்து 259 பேர் போலி வாக்காளர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
“இந்தப் பெயர்கள் அனைத்தும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.
“தவறாக இருந்த 1 லட்சத்து 81 ஆயிரத்து 405 பேரின் வீட்டு முகவரிகள் சரி செய்யப்பட்டுள்ளன,” என்று கூறியுள்ளார்.