உணவகத்திற்குள் லாரி புகுந்து விபத்து: 4 பேர் பலி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் இடாவாஹ் மாவட்டத்தைச் சேர்ந்த இஹ்டில் என்னும் சிற்றூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே ஓர் உணவகம் அமைந்துள்ளது. அவ்வழியே பயணம் செல்வோர் வாகனங்களை அருகே நிறுத்திவிட்டு அங்கு வந்து சாப்பிட்டுச் செல்வர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் அங்கு சில வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சாலையோர உணவகத்திற்குள் புகுந்தது.

இந்த விபத்தில் உணவகத்தின் உரிமையாளர் குல்தீப் குமார், வாடிக்கையாளர்கள் மூன்று பேர் என மொத்தம் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று இடவாஹ் மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் வெர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் லாரி ஓட்டுநரைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் பலியானவர்களை அடையாளம் காணும் பணியையும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே உ.பி.யில் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. அதற்கு போக்குவரத்து விதிமுறைகளை ஓட்டுநர்கள் சரிவரக் கடைப்பிடிக்காததே காரணம் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!